შეწირულობა 15 სექტემბერს 2024 – 1 ოქტომბერს 2024 თანხის შეგროვების შესახებ

தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 3

  • Main
  • Arts - Music
  • தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 3

தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 3

வீ.ப.கா.சுந்தரம்
როგორ მოგეწონათ ეს წიგნი?
როგორი ხარისხისაა ეს ფაილი?
ჩატვირთეთ, ხარისხის შესაფასებლად
როგორი ხარისხისაა ჩატვირთული ფაილი?
கலைக்களஞ்சிய ஆசிரியரின் முகவுரை
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியம்' என்பது இந்நூலின் பெயர். இதன் சுருக்கக் குறியீடாக "பா. த. இ. களஞ்" என்பதை அனைவரும் ஒருமைப்பாட்டுடன் பயன்படுத்தலாம். முதல் தொகுதியில் - 12 உயிர் எழுத்து வரிசையும் (1992), இரண்டாம் தொகுதியில் - ' க - ச - ஞ' - எழுத்து வரிசையும் (1994), மூன்றாம் தொகுதியில் - த - ந - ப - எழுத்து வரிசையும் (1997) இடம் பெற்றுள்ளன.
இசைத்துறையில் தெளிவு: தமிழிசை ஆராய்ச்சியை வரலாற்றில் முதன்முதல் முறையாக நெறியாகத் தொடங்கி மிகப் பெரும் ஆய்வுப் பணிகள் நடத்தியவர் - இருவர் : (1) கருணாமிர்த சாகரமுடைய மு. ஆபிரகாம் பண்டிதரும் (1917), (2) இவரைத் தொடர்ந்து யாழ் நூல் விபுலானந்தரும் (1947) ஆவர். இவ்விருவரிடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தன ; இதனால் இசை இலக்கணத்தில் தெளிவும் திட்டமும் ஏற்படாமல் இருந்து வந்தன. எடுத்துக்காட்டாக, ஆதி அடிப்படைப் பாலையாக (Primordial Scale) நிற்பது சங்கராபரணத்திற்குரிய அரும்பாலை என்றார் மு. ஆபிரகாம் பண்டிதர்; இப்பாலையினையே யாழ் நூல் விபுலானந்த அடிகளார் அரிகாம்போதிக்குரிய செம்பாலை என்றார். இந்த இருவர் ஆய்வுகளுக்குள்ளே எவர் எவர் எங்குளங்கு ஏன் சரி என்று நான் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து, பல்லாண்டு தொடர்ந்து ஆராய்ந்து என் முனைவர் பட்டத்து ஆய்வேட்டை அமைத்தேன். மேலே காட்டியவற்றுள் - அரிகாம்போதியான செம்பாலையே தமிழகத்தின் ஆதி அடிப்படைப் பெரும் பண் என்று நிறுவியுள்ளேன் . அடிப்பாலைக்குரிய ஏறுஇறங்கு நிரல் மாறினால் ஏழ் பெரும் பாலைகளும் அவற்றில் பிறக்கும் நூற்றுக்கணக்கான கிளைப்பண்களும் வேறுபட்டுக் குழம்பிவிடும். எனவே இந்த இடத்தில் வலமுறைத் திரிபில் யாழ் நூலார் கண்டுபிடிப்பு ஏற்றற்குரியது என்றும், இடமுறைத் திரிபுக்கு மட்டுமே மு. ஆபிரகாம் பண்டிதரின் முடிவு பொருந்துவது என்றும் கூறியுள்ளேன் (காண்க: பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்' என்னும் எனது நூலில் -முல்லையாழ் ஆய்வு). இருவரிடையே மற்றொரு கருத்து வேறுபாடு பற்றி : விபுலானந்த அடிகளார் இன்றைய சட்சம் பண்டைய இளி என்று கொண்டதால் பண்களைப் பற்றிய அவருடைய ஆய்வுகள் ஏற்றற்குரியன அல்ல என்பர் ஞா. தேவநேயப் பாவாணர்.
கலைச் சொல்லகராதி: கல்லூரிகள் பலவும் கலைச் சொல் தொகுதிகளில் ஒருமைப்பாடு காணாமல் உள்ளன. சில கல்லூரிகள் தத்தம் போக்கில் தத்தம் தமிழ்த் தகுதிக்கேற்ப இசைக் கலைச் சொல்களைத் தாமே ஆக்கி இடர்ப்படுகின்றன. இசைத் துறையைப் பொருத்தவரையில் புதிய கலைச் சொல்களை நாம் மிக அதிகமாக உண்டாக்கத் தேவையில்லை. சிலப்பதிகாரத்திலும் பழங்கால இலக்கியங்களிலும் இசைக் கலைச் சொல்களை நம் மூதாதையர்கள் முந்தைக் காலத்திலேயே படைத்து வைத்துள்ளனர். துணைவேந்தரின் திட்டப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலைச் சொல்களைப் பழம் தமிழ் நூல்களினின்றும் திரட்டிக் கலைச்சொல் அகராதியை ஆக்கிக் கொண்டுள்ளது. அந்நூல் விரைவில் வெளிவரும். களஞ்சியத்தில் வடசொல்களைப் பிறைக்குறிக்குள் இட்டுள்ளேன். சில பல இடங்களில் பிறர் சொல்லுவதை அவரவர் நடையிலும் வடசொல் களையாமலும் வெளியிட்டுள்ளேன்.
தேவாரப் பண்ணாய்வு' இம்மூன்றாம் தொகுதியில் சிறப்பிடம் பெறுகிறது. தேவாரப் பண்களை எப்படி ஆராய்வது? தமிழிசைக்கு அடிப்படை - செம்பாலை இதற்குரிய இன்றைய இராகம் அரிகாம்போதி. இதன்வழியாகச் சங்ககால ஏழ்பெரும் பாலைகட்குரிய ஏறு இறங்குச் சுர நிரல்களை ஆய்வாளர்கள் பலரும் கண்டுபிடித்து நிலைப்படுத்தியுள்ளனர். ஒரு கிளைப்பண் எந்தப் பெரும் பாலையிலிருந்து பிறந்ததோ அந்தப் பெரும் பாலையின் இசை நரம்புகளையே அது பெற்றிருத்தல் வேண்டும். ஒர் எ-டு: கோடிப்பாலை மருத நிலத்துப்பண்-இது காலைக்குரியது; இது வேனிற்காதையில் இடம் பெறுகிறது (சிலப்.8) இதற்குரிய இன்றைய இராகம் கரகரப்பிரியா (விபுலானந்தர்ப்படி) . இதன் கிளைப்பண் மருதப்பாணி = வைகறைப்பாணி. இதுவே புறநீர்மைப்பண் (மருதப் பெரும் பண்ணின் சுரங்களைக் கொண்ட திறப்பண்) (சிலப். 4 75-8 அடியார்க்). இதனைப் பண்ணுப் பெயர்ப்பு முறையிலும் வேறு குறிப்புகளைக் கொண்டும் முடிவு கட்ட முறைகளும் உண்டு. மேலும், முல்லைத் தீம்பாணிக்கு (மோகனம்) இளங்கோவடிகள் சுரக்கோப்பு தெரிவித்துள்ளார் (லெப். 17:18); இந்தளப் பண்ணிற்குச் சேக்கிழார் சுரஅடைவு தெரிவித்துள்ளார் (தடுத்தாட் 75); மேலும் பண்ணுப் பெயர்ப்பு முறையிலும் இந்தளப் பண்ணைக் கண்டுபிடிக்கலாம் (பார்க்க: தொ. 13 186), ( தொ." என்பது - தொகுதி).
ஆம்பலந்தீங்குழல் - நெய்தல் நிலப்பண் (பார்க்க: தொ. 13 127); கொன்றையந்தீங்குழல் - (பார்க்க: தொ. 11: 220). இவ்வாறே தேவாரப் பண்களுக்கு உரிய இன்றைய இராகங்கள் கண்டுபிடித்துக் கூற முயன்றுள்ளது இக்களஞ்சியம். இவை பொருந்திய திருந்திய அறிவியல் நெறியிலும் மரபு முறையிலும் அமைந்த ஆய்வுகளாயினும் மேலும் ஆராயலாம். தேவாரப் பண்கள் சங்க இலக்கியங்களோடு தொடர்புடையன.
தாள முழக்குகளை எழுதிக்காட்டும் புதிய முறை இந்த மூன்றாம் தொகுதியில் விரிவாக இடம் பெற்றுள்ளன. 1/4, 1/8, 1/16, 1/32, 1/64 என்னும் சிற்றெண்கள் தாளக் கணக்கியலில் சிறப்பான உயர்வான இடம் பெறுகின்றது. இவற்றை எப்படி எழுதிக்காட்டுவது? ஒன்றாம் காலம் இரண்டாம் காலச் சொற்கட்டுகளை முழுவதும் மேற்கோடிட்டுக் காட்டுதல் நூல் நெடுக முடியாது. இசையியலில் காலக் கணக்கியல்தான் தலையானது. இதனை இசைக்கல்லூரிகள் தனி வகுப்பில், தாள முழக்கை எழுதிக்காட்டும் முறைகளை விதிகளை விளக்கிக் கற்பிக்க வேண்டும்.(The Mathematics in Music) இசையில் கணக்கியல் என்ற பாடத்தை இசைக் கல்லூரிகளில் புகுத்த வேண்டும். இதனை முக்கிய பாடம் ஆக்குதல் வேண்டும். மதுரை இசை மேதை சி. சங்கரசிவனாரிடம் நான் பாடங்கேட்டு, அறிந்துகொண்ட அறுதி, தீர்மானம், முத்தாய்ப்பு, மோரா முதலியவைகளைப் புது முறையில் கட்டகங்களில் அமைத்து விளக்கியுள்ளேன். பழங்காலத்துப் பாகவதர்கள் கூறுவார்கள் - எல்லோருக்கும் காலக்கணக்குகளைச் சொல்லித்தரக் கூடாது - என்று. இரண்டு மூன்று நான்கு எனறு எழுததுககள் மூலம் இசைக் கணக்கியல் கற்பிப்பார்கள்.
இம்மூன்றாவது கலைக்களஞ்சியம் இதுகாறும் உரிய விளக்கம் பெறாத கடினமான பலபல கலைச்சொல் தலைப்புகளை விரிவாக விளக்கியுள்ளது. அவற்றுள் சிலவற்றையேனும் சுட்டிக் காட்டுதல் நலம்:
தன்னமும் தாரமும் தன்வழிப் படரல் (34ஆம் பக்), தனிநிலை ஒரியல் (35), தாண்டகம் (39, தாண்டவம் (37), தாளக் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் (42), தாளம் நாற்பத்தொன்று (42), தீர்மானங்கள் (46-48), கதிபேதம் (52), தியாகராசரும் இசைமரபும் (62), திருநேரிசை (74), "நேர்திறம் - நோதிறம் (228), திருவாசகத்தில் தெள்ளேனம் (90), தில்லாணா (103), நூற்று மூன்று பண்கள் (219). நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து ஆடல் எனபதில் நாட்டிய நன்னூல் - தமிழ் நூல் என நிறுவுதல் (188), நடைமிகுந்தேத்தும் குடை நிழல் மரபு (167), பஞ்சமரபின் வரலாற்றுக்கால ஆய்வு, நேரிசை (224), துணங்கை (114), நட்டபாடை (63), நரம்புளர்வார் (177), நாட்டியத்திற்குரிய பண்டைத்தாளம் (187) முதலிய தலைப்புக்கள் படித்துப்புதுப் பொருள்பெறத்தக்கவை.
"199 ஆதியிசைகள்" (இராகங்கள்) (சிலப். 3:45, ஈருரை) என்றதற்கு விளக்கம் காணல் இயலவில்லை. ஐம்பால் எழுத்து, உடற்றமிழ், இயல், இசை ஏழு மூவேழி பெய்தல், தொண்டு மீண்ட பன்னிராயிரம், கொண்டனர் இயற்றல் - இவை எல்லாம் எழுத்து இலக்கணம் பற்றிய ஒரு பண்டைய நூலின் சூத்திரப் பகுதிகள். இது சிதைந்த சூத்திரம். இதற்குப் பொருள் காண வேண்டுமெனில் இது குறிப்பிடும் எழுத்துக் கணக்குத் தெரிதல் வேண்டும்; கொடுத்துள்ள குறிப்புகள் தெளிவற்றவை; சிதைவுற்றவை; குறைபட்டவை. எனவே, இதில் குறிப்பிட்ட எண்களைக் காணமுடியாது. ஒவ்வொன்றின் எண் தொகை தெரிந்தாலும், உறழ்ந்து 11991 எனக் காட்டினாலும் இவற்றின் ஆரோகணம் அவரோகணம் காட்ட முடியவே முடியாது. எனவே இச்சூத்திரத்திலிருந்து பொருளைக் கண்டுகொள்ள என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. அமெரிக்காவில் உலவுதரு சொற்பொழிவில் நியூசெர்சியில் ஒருவர் 11991-க்குப் பொருள் விளக்குங்கள் என்றார். நான் - 'என் அற்பச் சொற்பப் பற்றாமுற்றாச் சிற்றறிவிக்கு எட்டவில்லை என்றேன்"; சிரித்தார்.
தமிழிசை என்பது வளர் இசை, அது வாழ்விசை. வாழிய வளமார் இசை.
வீ.ப.கா. சுந்தரம்
25.5.1997
კატეგორია:
ტომი:
3
წელი:
2006
გამოცემა:
இரண்டாம் பதிப்பு; முதல
გამომცემლობა:
பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி
ენა:
tamil
გვერდები:
341
ფაილი:
PDF, 11.72 MB
IPFS:
CID , CID Blake2b
tamil, 2006
ონლაინ წაკითხვა
ხორციელდება კონვერტაციის -ში
კონვერტაციის -ში ვერ მოხერხდა

საკვანძო ფრაზები